Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில், ஊதிய உயர்வு கோரி 6,500 தொழிலாளர்கள் போராட்டம்!

ஏப்ரல் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரின் அத்தியாவசியமற்ற பல சேவைகள் தற்போது முற்றாக முடங்கியுள்ளன.

மொன்றியல் மாநகரசபையின் சுமார் 6,500 துப்புரவு மற்றும் பராமரிப்புத் தொழிலாளர்கள் நேற்று காலை முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாகவே, மொன்றியல் நகரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. மொன்றியல் நகரில் வீதிகளைச் சுத்தம் செய்தல், பூங்கா பராமரிப்பு மற்றும் குப்பை சேகரிப்புப் பணிகள் பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. மொன்றியல் மாநகரசபையினால் நிர்வகிக்கப்படும் விளையாட்டு அரங்குகள்
மற்றும் ஈக்கோ-சென்டர்கள் (Eco-centres) அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

வீதிகளில் உள்ள குழிகளைச் சீரமைக்கும் பணிகள் மற்றும் ஏனைய திருத்த வேலைகள் அனைத்தும் மொன்றியலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. சம்பள உயர்வு மற்றும் வேலை நேர ஒழுங்குமுறை தொடர்பாக மொன்றியல் மாநகரசபை நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாகும்.

அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், ஊழியர்களின் நலன் கருதி வேலை நேரங்களில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். இதேவேளை, தற்போதைய நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு முறையான சலுகைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மொன்றியல் மேயர்
தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தம் எதிர்வரும் வியாழக்கிழமை நிறைவடையும் எனவும், மொன்றியல் மாநகரசபையின் சேவைகள் அனைத்தும் அன்றைய தினம்
வழமைக்குத் திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக்கில் கண்காணிப்பு வளையத்தைத் துண்டித்துவிட்டுத் தப்பியோடிய சந்தேக நபர்!
அடுத்த செய்தி கியூபெக் மாகாணத்தின் 33-வது முதல்வராக கிறிஸ்டின் ஃப்ரெச்செட் பதவியேற்றுக் கொண்டார்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நுகர்வோர் விவகார அதிகாரசபை சரும பூச்சுகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை…

மே 28, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

செவ்வாழைப்பழம் உண்பதால் கிடைக்கும் நன்மைகள் ….

மார்ச் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல அயதுல்லா அலி கொமெய்னி!

ஜூன் 18, 2025
கியூபெக்

ட்ரூடோ சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டம் மக்கள் மற்றும் சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்

மே 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?