நுவரெலியா பிரதேச சபையின் தலைவரான திரு வேலு யோகராஜன் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஆணைக்குழுவினால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசுக்கு சொந்தமான நிலத்தை முறைக்கேடாக பயன்படுத்தியுள்ளதுடன், இதனால் அரசாங்கத்திற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதானவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
