அகதிகளாகத் தஞ்சம் கோருபவர்களுக்கும் குறைந்த விலையிலான (Subsidized) குழந்தைப்பராமரிப்பு வசதி வழங்கப்பட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பை முடக்கிவிடுவதற்கு, கியூபெக் மாகாண அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 6-ஆம் திகதி, கனடிய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அகதித் தஞ்சம் கோருபவர்களுக்கு மலிவு விலை குழந்தைப்பராமரிப்பு வசதியை மறுப்பது பாலினப் பாகுபாடு (Sex Discrimination) என்று அறிவித்தது.
குழந்தைப்பராமரிப்பு வசதி இல்லையென்றால், அகதித் தாய்மார்களால் வேலைக்குச் செல்லவோ அல்லது பிரெஞ்சு மொழியைக் கற்கவோ முடிவதில்லை. இது அவர்களை மேன்மேலும் வறுமைக்குள்ளாக்குகிறது என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
இந்த நீதிமன்றத் தீர்ப்பை முடக்குவதற்காக நாட்வித்ஸ்டாண்டிங் கிளாஸ் (Notwithstanding Clause) எனும் சிறப்புச் சட்ட அதிகாரத்தை, கியூபெக் மாகாண அரசு பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்வித்ஸ்டாண்டிங் கிளாஸ் (Notwithstanding Clause) எனும் சிறப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்துவது "இரக்கமற்ற செயல் என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
