ஈரானில் 10 வெளிநாட்டு உளவாளிகளை கைது செய்துள்ளதாக ஈரானின் புரட்சிகர பொலிஸ் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இவ்வாறு கைதானவர்களில் நால்வர் ஈரானின் முக்கிய பொருளாதார கட்டமைப்புக்கள் தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளனர்.
மீதமுள்ள ஆறு பேர் மன்னராட்சிக்கு ஆதரவாக செயட்படும் பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக உளவு பார்த்த 10 உளவாளிகள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவலை இன்னும் வெளியிடப்படவில்லை.
