நாட்டில் காலநிலை தொடர்பான எதிர்வுகூறலை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை , மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடனான மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமாக காணப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
