மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள கனேடியர்களை மீட்பதற்காக விமானம் மற்றும் பேருந்து வழித்தடங்களை மத்திய அரசு அவசரமாக ஏற்பாடு செய்து வருகிறது.
சுமார் 3,500 கனேடியர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை விட்டு வெளியேற உதவி கோரியுள்ளதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று அறிவித்தார்.
தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் 1,08,000-க்கும் அதிகமான கனேடியர்கள் வசித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து கனேடியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற சிறப்பு விமானங்கள் மற்றும் பேருந்துகளை ஒருங்கிணைத்து வருவதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
