Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

நீதிக்கான தாய்மார்களின் குரல் உலகம் முழுவதும் ஒலிக்கிறது” – ஜெனிவாவில் இலங்கை குறித்து Volker Türk கடும் எச்சரிக்கை!

பிப்ரவரி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஜெனிவாவில் நடைபெறும் United Nations Human Rights Council 61வது கூட்டத் தொடரில், ஐநா மனித உரிமைகள் உயர்மட்ட ஆணையாளர் Volker Türk இலங்கை குறித்து முக்கியக் கருத்துகளை வெளியிட்டார்.

அவர் தனது உரையில்,

இலங்கையில் போருக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் செயல்முறைகள் மந்தமாக உள்ளன என்று குறிப்பிட்டார். கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பகமான மற்றும் சுயாதீன விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தினார். இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு நீதி மற்றும் உண்மை வெளிப்படுத்தல் தேவை எனவும் தனது உரையில் கூறிய ஐநா மனித உரிமைகள் உயர்மட்ட ஆணையாளர் Volker Türk இலங்கையின் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களை விசேடமாகக் குறிப்பிட்டு கௌரவித்தார். அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற ‘பிளாசா டி மாயோ’ தாய்மார்களுடன் இவர்களை ஒப்பிட்ட அவர், நீதிக்கான இவர்களின் 15 ஆண்டுகாலப் போராட்டத்தை “அசைக்க முடியாதது” என்றும், அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான ஒரு மிகமுக்கிய சக்தி என்றும் வர்ணித்தார்.

மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) போன்ற சட்டங்களில் மனித உரிமை தரநிலைகளுக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர் மேலும், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் குறித்தும் கவலை வெளியிட்டார்.

அதேசமயம், நல்லிணக்கம், ஜனநாயக நடைமுறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை வலுப்படுத்துவதில் இலங்கை அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியாவில் கத்தி குத்து
அடுத்த செய்தி AI முதல் பாதுகாப்பு வரை – இந்தியா நோக்கி பிரதமர் மார்க் கர்னியின் முக்கிய பயணம்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க சமூகமட்ட அமைப்புகள் கோரிக்கை

அக்டோபர் 27, 2025
இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளது-வோல்கர் டர்க்!

செப்டம்பர் 8, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலை பகுதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!

நவம்பர் 13, 2025
இலங்கை

யாழில் இருந்து மிக விரைவில் நேரடி ஏற்றுமதி

ஜனவரி 12, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?