வவுனியா, உக்குளாங்குளத்தில் பெண் ஒருவர் மீது பிறிதொரு பெண் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த நிலையில் 64 வயதுடைய பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது வவுனியா, பண்டாரிக்குளம், முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இடம்பெற்றுளள்து.
இதன்போது உக்குளாங்குளம் பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இரு பெண்களுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்த முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
