நாட்டில் இன்னும் ஓரிரு நாளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும்.
பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஏனைய பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
