பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ப்ளர் ரிட்ஜ் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் நகரின் பல இடங்களில் உருக்கமான அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
டம்ப்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள குன்றின் மீதுள்ள ஒரு மரம், தற்போது மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக மாறியுள்ளது.
பலியான 6 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்களைக் கௌரவிக்கும் விதமாக, அந்த மரத்தின் அடியில் மெழுகுவர்த்திகள், மலர்கள் மற்றும் பொம்மைகளை (Teddy Bears) மக்கள் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த பிரம்மாண்டமான மெழுகுவர்த்தி அஞ்சலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். டம்ப்ளர் ரிட்ஜ் மேயர் டாரில் கிரகோகா மலர் வளையம் வைத்து தனது
அஞ்சலியைத் தொடங்கினார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் மாகாண முதலமைச்சர் டேவிட் ஈபி (David Eby) ஏற்கனவே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில், இன்று பிரதமர் உள்ளிட்ட மத்திய அரசத் தலைவர்கள் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
