மலையகத்தின் சில இடங்களில் திடீரென மழை பெய்துள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலே பல மணித்தியாலங்கள் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிட்வா புயலுக்கு பின்னர் மக்கள் கொஞ்சம் மீண்டு வந்துள்ள நிலையில் தற்போது மண்சரிவு போன்ற ஆபத்தான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் மக்கள் காணப்படுகின்றனர்.
குறிப்பாக மாத்தளை, எல்கடுவ, உக்குவலை, வத்தேகம, மடவலை, பன்விலை, மடுல்கலை, கபரகலை, பெத்தேகம, கோமரை, போன்ற பகுதிகளில் கடும் மழை பெய்ததோடு கண்டி நகர் மற்றும் அண்டிய பகுதிகளிலும் நுவரெலியா மாவட்டத்தின் பூண்டுலோயா உட்பட்ட பல இடங்களிலும் புசல்லாவை பகுதியிலும் பிற்பகல் வேளையில் மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
