கொழும்பு நகரில் புதிய பேருந்து சேவையை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி ‘Lanka Metro Transit’ பேருந்து சேவையையே அரசாங்கம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
இன்றையதினம் முற்பகல் வேளையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் இது தொடர்பான கலந்துரையாடல் முன்வைக்கப்பட்டது.
இந்த புதிய பேருந்து சேவையானது கொழும்பைச் சுற்றியுள்ள 6 பிரதான வீதிகள் ஊடாக செயற்படுத்தப்படவுள்ளது.
மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் பின்னர் காலி மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும், அடுத்த 03 ஆண்டுகளுக்குள் 08 பிரதான நகரங்களுக்கும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
