கியூபாவில் ஏற்பட்டுள்ள மிகக்கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டுக்கான விமானச் சேவைகளை ஏர் கனடா (Air Canada) மற்றும் வெஸ்ட்ஜெட் (WestJet) ஆகிய கனேடிய விமானச்சேவை நிறுவனங்கள் இடைநிறுத்தியுள்ளன.
இந்த விமானச்சேவை இடைநிறுத்தம் நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இந்த முடிவால், கியூபாவில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான கனடிய சுற்றுலா பயணிகள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 11-ஆம் தேதி வரை கியூபாவின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலும் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் கிடைக்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை கியூபா வான்வழிப் போக்குவரத்து ஆணையம் விடுத்துள்ளது.
இந்நிலையில், கியூபாவில் தற்போது சிக்கியுள்ள சுமார் 3,000 கனடியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
