யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு சுடலைக்கு வீதியின்மையால் இறுதிக்கிரிகையை மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாகர்கோவில் கிழக்கில் இன்றைய தினம் அமரத்துவமடைந்த ஒருவரது இறுதிக்கிரியைகளை மேற்கொள்வதற்கு சுமார் இரண்டடி மழை வெள்ளத்திற்க்குள் சென்று கொட்டகை எதுவுமின்றி வெறும் நிலத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டன.
இதட்கு பொறுப்பானவர்கள் சுடலைக்கான வீதி மற்றும் கொட்டகையை பெற்று தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
