பேருந்து மிதிப்பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த இளைஞர் பேருந்தின் மிதிப் பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
புலோப்பளையை சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் என்ற 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
கடந்த 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மிதி பலகையில் அந்த இளைஞர் பயணித்துள்ளார்.
அதன் போது, கரந்தாய் பகுதியில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் ,
அவரை மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமத்தித்துள்ளனர்.
இந் நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடம் மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
