தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை பயணித்த கார் திடீரெனெ தீபிடித்து விபத்துக்குள்ளாக்கியது
தீ விபத்தில் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும், எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு சேவைப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


