திருகோணமலை கடற்கரையில் அடாவடித்தனமாக இரவோடு இரவாக கட்டப்பட்டு வந்த புத்தர் சிலை மக்களின் தொடர் எதிர்ப்பினால் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பணிப்புரமைக்கு அமைய சிலை நள்ளிரவில் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
திருக்கோணமலை பிரதான கடற்கரையில் முற்றிலும் சட்டத்திற்கு முரணாக எந்தவித அனுமதிகளும் பெறாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் கடற்கரை பகுதியை தனியார் வேலி கொண்டு அடைத்து, விகாரை கட்டுமான பணிகள் இடம் பெற்று வந்தன.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் இன்று (16) அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன் அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து வெளியேற்றப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.
