தங்கக் கட்டியின் விலை 1.2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,379.93 ஆக உயர்ந்து, 30 டிரில்லியன் டொலர் சந்தை மூலதனத்தை எட்டியது.
இன்றைய தினம் தங்கத்தின் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட $4,380 ஐத் அதிகரித்துள்ளது
இது குறித்த மூன்று ஆண்டுகள் காலக்கட்டத்தின் இரு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டு தங்கத்தின் விலை 65 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக பதட்டங்கள், அதிகரித்து வரும் நிதி மற்றும் கடன் அளவுகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மத்தியில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளியின் விலையும் இந்த வாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. என்பது குறிப்பிடதக்கது.
