அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்பதாக இந்தியப் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
காசா போர் நிறுத்தம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பின்னர் காசா போர் நிறுத்தத்துக்கான விரிவான திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக் கொண்டார் என ட்ரம்ப் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ட்ரம்பின் போர் நிறுத்த யோசனைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது.
இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காசா போர் நிறுத்தம் குறித்த அதிபர் ட்ரம்பின் விரிவான திட்டத்தை வரவேற்கிறோம். மேலும், ட்ரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால மற்றும் நிலையான அமைதியை வழங்குகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ட்ரம்பின் திட்டங்களை வரவேற்று எட்டு அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன.
கட்டார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், துருக்கி, சவூதி அரேபியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
