விளையாட்டு துறை அமைச்சர் தலைமையில் கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சர். சுனில்குமாரகம மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன்ண விளையாட்டு கழகங்களில் தலைவர்கள் மற்றும் பயிற்விப்பாளர்கள்கலந்து கொண்டனர்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்கள் பல்வேறு குறைபாடுகளில் இருப்பதாகவும் தமது குறைபாடுகளை இன்றைய தினம் கலந்து கொண்ட விளையாட்டு துறை அமைச்சரிடம் நேரடியாக கலந்துரையாடினர் கலந்துரையாடலின் போது விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர் மற்றும் விளையாட்டு துறை பயிற்றுவிப்பாளர்கள் தாம் விளையாட்டுத்துறையில் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு தெரிவித்தனர்
இதற்கு பதில் அளித்த விளையாட்டுதுறை அமைச்சர் கழகங்களில் குறைபாடுகள் நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் இருப்பதாகவும் அதற்கான நிதியும் தம்மிடம் கையிருப்பில் உள்ளதாகவும் உங்கள் விளையாட்டு கழகங்களுக்கு தேவைப்படுகின்ற தேவைப்பாடுகள் தொடர்பாக அறிக்கைகளை தருமாறு கேட்டுக்கொண்டார்
மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டுள்ள செய்த விவரங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை விரைவாக தரும் பொழுது தம்மால் நிதியை பெற்றுத் தர முடியும் எனவும் தெரிவித்தார்.
