Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வீடுகள்!

செப்டம்பர் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெருந்தோட்ட பகுதிகளில் அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் வசிப்பிடங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவக சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.

பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 66.9 சதவீதமானவை மண்சரிவு அபாயத்துக்கு உட்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, அந்த 5 ஆயிரத்து 64 வீடுகளும், நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 97 வீடுகளும் அதிக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டில் மீரியபெத்தை மண்சரிவில் 36 பேர் கொல்லப்பட்டனர்.

குறித்த பகுதி மண்சரிவு அபாயமுள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டு அந்த மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவித்திருந்த அரசாங்கம் அவர்கள் வசிப்பதற்கான மாற்றிடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எனவே, இது இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மரணம் என்பதை கூறுவதை விட அப்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினால் புரியப்பட்ட கொலைகளாக கருத வேண்டும் என மாகாண சபையில் முன்னதாக பிரேரணையொன்றையும் கொண்டுவந்திருந்தேன்.

எதுஎவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் மக்களை ஆபத்தில் தள்ளாமல், பொறுப்புவாய்ந்து செயற்பட விரும்புகிறது.

அந்தவகையில், பெருந்தோட்டத் துறையில் அதிக மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வசித்துவரும் 2125 குடும்பங்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி,ஜனாதிபதி தலைமையில் தலா 32 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளும் 10 பேர்ச் காணியும் வழங்கும் நிகழ்வொன்று பண்டாரவளையில் நடத்தப்படவுள்ளது.

அதேநேரம், பதுளையில் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், பதுளை மாவட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 15 இடங்கள் பாதுகாப்பு வேலி இடுதல் உள்ளிட்ட பணிகள் மூலம் 150 மில்லியன் ரூபாய் செலவில் மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வு கூறல்!
அடுத்த செய்தி கொட்டாவ முதல் தொடங்கொட வரையிலான வீதிப் பகுதியைப் புதுப்பிப்பதற்கான ஒப்பந்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சோலார் மின் திட்டத்திற்கான கட்டணம் அதிகரிப்பு!

ஜூன் 22, 2025
இலங்கை

சிமாட் வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டல்

அக்டோபர் 27, 2025
இலங்கை

வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’

பிப்ரவரி 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?