ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஓமன் ஆகிய அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து, 189 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமன் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன்மூலம், 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ் தோனி தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என ஓமன் அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் விநாயக் சுக்லா தெரிவித்தார்.
மேலும் அவர் ஆட்டங்களை முடித்து அணியை வழிநடத்து விதம் ஈடு இணையற்றது. அவர் எனது குரு எனக் கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுக்லா 2 பந்துகளுக்கு 1ஓட்டத்தை மட்டுமே பெற்று ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.
