பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கத்துருவெல ரயில் நிலையத்துக்கருகில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
70 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
உயிரிழந்த முதியவரின் உடல் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
