அரசாங்கத்தின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் இந்த நேரத்தில் பொதுமக்களைச் சந்திப்பதைத் தவிர்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் நாடு தழுவிய சுற்றுப்பயணங்கள் தொடர்பாக அரசாங்கத்தால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதை விளக்கினார்.
இப்போது அரசாங்கம் மக்களைத் தவிர்த்து வருகிறது. அதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர் மக்களைச் சந்தித்து வருகிறார்.
இது மக்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்கு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் உதவும். இதைத் தாங்க முடியாமல், தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் விமர்சிக்கின்றனர். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அரசாங்கத் தலைவர்கள் பொதுமக்களைச் சந்திப்பதில்லை என்றும், நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
