ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் ஜனித் லியனகே சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனித் லியனகே அண்மைக்காலமாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில், அவருக்கு ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
முன்னதாக ஒகஸ்ட் 28ஆம் திகதி ஆசியக் கிண்ண தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்திருந்தது.
இந்தநிலையில் ஆசியக் கிண்ண தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணிக்கான முதலாவது போட்டி செப்டெம்பர் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
