ஒன்டாரியோவில் வீடுகட்டுமானச் சந்தையில் நிலவும் மந்தநிலை காரணமாக, ஆயிரக்கணக்கான கட்டுமானப் பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான ஒன்டாரியோ குடியிருப்பு கட்டுமான சபை (RESCON) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மாகாண அரசு புதிய வீட்டுவசதிக் கொள்கைகளை வகுத்து, கட்டுமானத்தை ஊக்குவிக்க திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
RESCON அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் லியால் (Richard Lyall), புதிய திட்டங்களுக்கான பணிகள் குறைந்துவிட்டதாகவும், கட்டுமான நிறுவனங்கள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒன்டாரியோவின் நிதி பொறுப்பு அலுவலகம் (Financial Accountability Office of Ontario) வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, அந்த மாகாணத்தில் வேலையின்மை வீதம் 7.8% ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
