வடமேற்கு நைஜீரியா, ஜம்ஃபாரா மாநிலம், புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு 200 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாவட்டத்தில் இருக்கும் கிராமங்கள் மற்றும் சேரிகளில் சுத்தமான நீர் கிடைக்காமமையால் இந் நோய் பரவுவதாக கூறப்படுகிறது.
மேற்குறித்த கிராமங்களில் ஆரம்ப சுகாதார வசதிகள் இன்மையால் பல நோயாளிகள் வீட்டிலேயே சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகளவான உயிர்களை இழப்பதற்கு முன்பு அவசரகால மீட்புக் குழுக்கள் மற்றும் கொலரா சிகிச்சை மையங்களை குறித்த கிராமங்களில் அமைக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகின்றது.