ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது.
இந்த பிணை மனு கொழும்பு கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
அப்போது, குற்றப் புலனாய்வுத் துறை சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ், சந்தேக நபருக்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் உண்மைகள் முன்வைக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
விசாரணை முழுமையடையாததால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஷா பிரேமரத்ன, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்து சந்தேக நபரைப் பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரினார்.
பின்னர், பிணை மனு மீதான உத்தரவு அறிவிப்பை அரை மணி நேரம் ஒத்திவைப்பதாக நீதிவான் அறிவித்தார்.
