கனடாவின் இரண்டு மிகப்பெரிய பணக்கார குடும்பங்களான தாம்சன் மற்றும் வெஸ்டன் குடும்பங்கள், கனடாவின் வரலாற்றில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றான ஹட்சன்ஸ் பே நிறுவனத்தின் அரச சாசனத்தை வாங்குவதற்காக ஒருவருக்கொருவர் மோதவுள்ளனர்.
தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரான கோடீஸ்வரர் டேவிட் தாம்சன், 12.5 மில்லியன் டொலருக்கு ஆவணத்தை வாங்குவதற்கு வெஸ்டன் குடும்பம் அளித்திருந்த சலுகையை விட அதிகமாக, குறைந்தபட்சம் 15 மில்லியன் டொலருக்கு ஏலத்திற்கு முன்மொழிய தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தாம்சன் இந்த சாசனத்தை வாங்கி மனிடோபா ஆவணக் காப்பகத்திற்கு அன்பளிப்பாக வழங்க திட்டமிட்டுள்ளார்.
வர்த்தகத்தில் ஏற்பட்ட பெரும் கடன்களால், ஹட்சன்ஸ் பே நிறுவனம் கடந்த மார்ச் மாதம் திவால்நிலை பாதுகாப்பு கோரி விண்ணப்பித்தது.
இதன் விளைவாக, தனது கடன் வழங்குநர்கள், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு செலுத்த வேண்டிய கடனை ஈடுகட்ட, நிறுவனத்திற்குச் சொந்தமான கலைப் பொருட்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை விற்பனை செய்ய அது முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
