சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு தொடர்பாக அமெரிக்க பொலிஸாரால் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளதுடன், மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிகப்பெரிய அளவிலான சோதனையை பொலிஸார் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகளில் ஒமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் 12 வயதுக்குட்பட்ட 10 பேர், 17 ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 27 பேரைக் பொலிஸார் மீட்டனர்.
மீட்கப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணையில் நடத்தியதில் அனைவரும் கடத்தப்பட்டு விடுதி பணிக்காக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
மேலும் நீண்ட நேர வேலை, குறைவான ஊதியம், சிலருக்கு ஊதியமே வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சில பெண்களையும் சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
