இலங்கை சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியா சத்திய சாயி நிறுவனம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மனித மேம்பாட்டு கல்வி செயலமர்வு ஒன்றினை நடத்தி இருந்தது.
குறித்த செயலமர்வு இவ்வருடம் கா.பொ /த உயர்தர பிரிவுக்கு உள்நுழையும் மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக அமைந்திருந்தது.
மேலும் இச்செயலமர்வின் வளவாளராக வவுனியா கல்வியல் கல்லூரியின் முன்னை நாள் பீடாதிபதி பேனாட் மற்றும் சத்ய சாயி சர்வதேச நிறுவனத்தின் உப தலைவர் வைத்தியர் எஸ்.சிவகோனேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பாடசாலையின் அதிபர் ஆ.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் வவுனியா சத்தியசாய் நிலைய உப தலைவர் சிவக்குமாரன், தேசிய சபையின் உப தலைவர் அ. தவீசன் மற்றும் வடமத்திய பிராந்திய ஊடக இணைப்பாளர் அ.சதீசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
