மட்டக்களப்புக்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட போதை பொருளை வியாபாரத்துக்காக எடுத்து கொண்டு சென்ற இரு வியாபாரிகளை இன்று அதிகாலையில் நகர்பகுதியில் வைத்து 3700 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுள் ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணத்துடன் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
இதன்போது கொழும்பில் இருந்து பஸ்வண்டி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குறித்தபோதை பொருளை கடத்தி கொண்டு வந்து குறித்த வியாபரிகளிடம் வழங்கிய நிலையில் அதனை வாங்கி கொண்டு வரும்போது வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார் அவர்களை சுற்றிவளைத்து 23 வயதுடைய ஒருவரிடமிருந்து 3200 மில்லிக்கிராம், 23 வயதுடைய ஒருவரிடம் 4500 மில்லிகிராம் ஜஸ் போதை பொருள்களுடன் கைது செய்ததுடன் ஒரு இலச்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணம், 2 கையடக்க தொலைபேசிகளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் பூம்புகார் லயன்ஸ் கிளப் வீதி மற்றும் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது டன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
