ஒன்டாரியோவில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ரயில் மீது ஏறி ” சாகசம்” செய்ததாகக் கூறப்படும் ஒரு நபர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த ரயில் மொண்ட்ரீலில் இருந்து ஒட்டாவா நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
குறித்த நபர் ரயில் மீது ஏறி ” சாகசம் ” செய்து ஏற்படுத்திய, அசம்பாவிதம் காரணமாக குறித்த ரயில் நிறுத்தப்பட்டதுடன், பயணமும் பல மணி நேரம் தாமதமானது.
ஒன்டாரியோ மாகாண காவல்துறையின் ஸ்டோர்மாண்ட், டண்டாஸ் மற்றும் க்ளென்ஹெர்ரி பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகள், அலெக்ஸாண்டிரியா நகரின் வடமேற்கே, தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த ரயிலுக்கு அருகில் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.
“மிகைப்படியான சேதம் விளைவித்தல்” (mischief) மற்றும் ரயில்வே பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் “ரயில் பாதை அமைந்துள்ள நிலத்தில் அத்துமீறி நுழைதல்” ஆகிய குற்றச்சாட்டுகள், சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ரயில் மீது ஏறி சாகசம் செய்தவர் ரயிலின் பயணிகளில் ஒருவரா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் வெளியாகவில்லை.
