மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னாருவ பகுதியில் நேற்று பிற்பகல் ஒரு கிலோ 66 கிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
