பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குவதும் நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை திருத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும், நிகழ்நிலை காப்பு சட்டமூலம் திருத்தப்பட வேண்டும், இந்த நாட்டில் மறைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் தீர்க்கப்படாத கொலைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
GSP+ வசதி குறித்து அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடி வருவதாகவும், அரசாங்கம் பல விடயங்களில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதும் மனித உரிமைகளை உறுதி செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
