மன்னார் உத்தேச காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மன்னார் காற்றாலை மின்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடல் குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக, சுற்றுச் சூழலுக்கும் இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து மன்னார் மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேநேரம், இந்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கும் வகையில், முன்னதாக வடக்கு கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
இந்த நிலையிலேயே இன்று குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது
