பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் தலைவரான சுஜீவ ருவன் குமார டி சில்வா, ‘கிளப் வசந்த’ கொலை தொடர்பில் ஒகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட பின்னர், அவர் இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
