இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், போர்வீரர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் வகையில், கடமையின் போது காயமடைந்த போர்வீரர்களுக்காக நடத்தப்பட்ட பல்துறை மருத்துவ முகாமின் 6ம் கட்டம் ஊவா மற்றும் சபரகமுவ மாகாணங்களில் பல்வேறு காரணங்களால் காமடைந்த, ஓய்வுபெற்ற மற்றும் கடமையின் போது உயிரிநீத்த போர்வீரர்களின் உறவினர்கள் என 2000 க்கும் மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் இன்று தியதலாவ இலங்கை இராணுவ தொண்டர் படையணி பயிற்சி பாடசாலையில் நடத்தப்பட்டது.
தொடர்ச்சியான மருத்துவப் பிரச்சினைகளை தீர்பதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும், தொழில்சார் சுகாதார ஆலோசனைகளை வழங்குவதற்கும், நடமாடும் கண் மருத்துவ சிகிச்சை , நடமாடும் மருத்துவ ஆய்வக சேவைகள், பிசியோதெரபி சோதனைகள், செயற்கை மூட்டுகள் மற்றும் அறுவை சிகிச்சை கருவிகளுக்கான சோதனைகளை நடத்துவதற்கும், பல் சேவைகளை வழங்குவதற்கும், மனநல ஆலோசனை சேவைகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகளை ஊட்டச்சத்து நிபுணர்களால் வழங்குவதற்கும்
போர்வீரர் சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தினரால் மேற்பார்வையிடப்படும் இந்த மருத்துவ முகாமில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு தியாகம் செய்த போர்வீரர்கள் மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள், போரில் இறந்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் பிரச்சினைகளையும் ஆராய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இராணுவ சேவை படையணியின் முழு ஆதரவுடன், வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், மூக்குகண்ணாடிகள் மற்றும் ஏனைய அறுவை சிகிச்சை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
