மேல் மாகாணத்தில் உள்ள 53 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பயிற்சி உத்தியோகத்தர்களை “ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக” மாற்றும் பயிற்சி நேற்று இலங்கை மன்றக் கல்லூரியில், பிரதி அமைச்சர் சதுரங்க அபே சிங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த சர்வதேச மட்டத்தில் பெறுமதி வாய்ந்த பாடநெறி, “கற்றுக் கொண்டு செய்தல்” மற்றும் “அனுபவத்துடன் கற்றல்” என்ற அடிப்படையில் பிரயோகமாக அமைந்துள்ளது. இதன்மூலம், உத்தியோகத்தர்களின் திறமை மற்றும் மனப்பான்மை மேம்படுத்தப்பட்டு, சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களுக்கு சிறந்த ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக SLIM 100 மில்லியன் ரூபா முதலீடு செய்ய எதிர்பார்க்கப்பட்டு, முதற்கட்டமாக 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இலவசமாக வழங்கப்படும் இப்பாடநெறியை விரிவுரையாளர் சபை நடத்துகிறது. அமைச்சு மற்றும் SLIM இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் சிறு கைத்தொழில் அபிவிருத்தி பிரிவு மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிறுவனம் இணைந்து இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களை மேம்படுத்துவதற்காக, தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி திட்டத்தை தொடங்கியுள்ளது.
