இறந்த நிலையில் காட்டு யானையொன்று திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள வாய்க்காலில் இன்று மீட்கப்பட்டதாக சேருநுவர வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணத்தை அறிய உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் யானை உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
