முறையற்ற கழிவு முகாமைத்துவம் சூழலின் உயிர்பல்வகமைக்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விலங்கியல் துறைப் பேராசிரியர் கணபதி கஜபதி எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சரசாலை, நாகர்கோவில், அரியாலை போன்ற பகுதிகள், குறிப்பாக வலசைப் பறவைகள் வாழும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டவை, முறையற்ற கழிவகற்றலால் ஆபத்தில் உள்ளன. நகரமயமாதல், மக்கள்தொகை அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை கழிவு முகாமைத்துவத்திற்கு சவாலாக இருக்கின்றன. இதற்கு உகந்த முறையான கழிவகற்றல் பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை.
முறையற்ற கழிவகற்றல் மனிதர்களுக்கு மட்டுமல்ல, சூழலில் வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது. முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாவிட்டால், ஒரு சூழலின் ஒரு அங்கம் பாதிக்கப்பட்டால் முழு சூழலும் பாதிக்கப்படும்.
இதனால், யாழ் மாவட்டத்தில் முறையான கழிவு முகாமைத்துவம் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
