சமவுரிமையை வெல்வோம், இனவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று, மன்னாரில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் நகர் பகுதியில், இன்று முற்பகல் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும், இன்னொரு அடக்குமுறை சட்டம் வேண்டாம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை மையப்படுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேநேரம், அனைத்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும், நீதி வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் நேற்றைய தினம் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
