ஏமனில் கேரளாவை சேர்ந்த செவிலியரான நிமிஷ பிரியாவிற்கு நிறைவேற்றப்படவிருந்த மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவரான அபூபக்கர் முஃப்தி மூலம் நடத்த பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் குறித்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஏமனின் 16ம் திகதி நிமஷா பிரியாவிற்கு மரண தண்டனை நிறைவேற்ற படவிருந்தமை குறிப்பிட்டதக்கது.
கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாக நிரூபணமானதை அடுத்து அந்நாட்டு சட்டப்படி மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஜனவரி மாதம் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி அனுமதி அளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசுதரப்பில் இடம்பெற்ற ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காத நிலையில் இஸ்லாமிய தலைவர் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
