ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை 401 இல் கிங்ஸ்டனுக்கு கிழக்கே நடந்த ஒரு வாகன விபத்தில், பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது
நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் இருந்து ஒருவர் வெளியேறுகையில் மற்றொரு வாகனத்தால் மோதப்பட்டதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை பிற்பகலில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மல்லரிடவுன் (Mallorytown) மற்றும் லான்ஸ்டவுன் (Lansdowne) இடையே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தை ஒட்டிய நெடுஞ்சாலைப் பகுதி பல மணி நேரம் மூடப்பட்டது.
விபத்து குறித்த விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண காவல்துறை முன்னெடுத்துள்ளது.
