உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தமிழர் பகுதிகளில் தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு குறைந்துள்ளது என்று கூற முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்
தேசிய மக்கள் சக்திக்கு சற்று வாக்கு குறைந்துள்ளதே தவிர, அவர்களுக்கான ஆதரவு தற்போதும் வடக்கு, கிழக்கில் தொடர்ந்தும் உள்ளதாக ஸ்ரீதரன் கூறினார்.
செல்வாக்கு இல்லாமல் இருந்த தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் 3 ஆசனங்களைப் பெற்றதன் பின்னர் தற்போது செல்வாக்கு பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த செல்வாக்கு அவர்களது அரசியல் கதவுகளைத் திறந்துள்ளதாக ஸ்ரீதரன் சுட்டிக்காட்டினார்
எனவே தமிழ் கட்சிகள் மமதையோடு செயற்பட்டால் எதிர்வரும் தேர்தலில் வேறொரு பாடத்தைக் கற்க வேண்டிய நிலை உருவாகும் எனக் குறிப்பிட்டார்
தமிழ்த் தேசியத்தின் நம்பிக்கையை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என ஸ்ரீதரன் தெரிவித்தார்.