கல்கரி நகரின் வடமேற்குப் பகுதியான பவ்னெஸ், நகர சபையின் “பிளாங்கெட் ரீசோனிங்” (Blanket Rezoning) கொள்கை காரணமாக பெரும் வளர்ச்சி மற்றும் மாற்றங்களை சந்தித்து வருகிறது.
ஒரு காலத்தில் சிறிய பங்களாக்கள் நிறைந்திருந்த இந்த பகுதியில், இப்போது எட்டு குடும்பங்கள் வரை தங்கக்கூடிய புதிய வரிசை வீடுகள் (rowhouses) கட்டப்பட்டு வருகின்றன.
கடந்த மே மாதம் கல்கரி நகர சபையால் அங்கீகரிக்கப்பட்ட “பிளாங்கெட் ரீசோனிங்” கொள்கை, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் பல குடும்பங்களுக்கான வீடுகளைக் கட்டுவதற்கு அனுமதி அளிக்கிறது.
முன்னர், ஒவ்வொரு புதிய கட்டுமானத்திற்கும் தனித்தனியாக நில பயன்பாட்டு அனுமதி (rezoning approval) பெற வேண்டியிருந்தது.
ஆனால், இந்தப் புதிய கொள்கை மூலம், உடனடியாக கட்டுமானப் பணிகளைத் தொடங்க விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
“பிளாங்கெட் ரீசோனிங்” கொள்கை கல்கரியின் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வீட்டுப் பாதுகாப்பின்மை குறித்த கவலைகளுக்கு ஒரு தீர்வாக முன்வைக்கப்பட்டாலும், சில குடியிருப்பாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
