நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நிலவும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்த நிலைமைகள் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மாவட்ட மட்டத்தில் நிலைமைகளை கண்காணித்து, தேவையான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பொதுமக்கள் தங்களது பகுதிகளில் வெளியிடப்படும் வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளை அவதானித்து, அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவசர நிலை ஏற்பட்டால், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும்.


