நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூட்டாட்சி கலால் வரி மீதான (Federal excise tax) விலக்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளதாகக் கனடிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களால் பாதிக்கப்பட்டுள்ள கனடிய குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் (François-Philippe Champagne) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக, பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) தலைமையிலான லிபரல் அரசாங்கத்தால் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த வரி விலக்கு, வரும் இம்மாதம் 7 ஆம் திகதி வரை மட்டுமே அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது அது 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.



