காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையை முன்னெடுத்து வரும் முக்கிய சீக்கிய செயற்பாட்டாளரான இந்தர்ஜித் சிங் கோசலின் (Inderjeet Singh Gosal) உயிருக்கு ஆபத்து இருப்பதாக, மத்திய பொலிஸார் (RCMP) மீண்டும் எழுத்துப்பூர்வ எச்சரிக்கைக் கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுத் தலையீடுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் தணிக்கப்பட்டுவிட்டதாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசு கூறிவரும் நிலையில், இந்த நடவடிக்கை அரசின் கூற்றைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
காலிஸ்தான் பொதுவாக்கெடுப்புப் பிரச்சாரத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் இந்தர்ஜித் சிங் கோசல், ஓன்டாரியோவின் கலெடான் பகுதியில் வைத்து கடந்த 14 ஆம் திகதி அன்று இந்த எச்சரிக்கைக் கடிதத்தைப் பெற்றதாகக் உறுதிப்படுத்தியுள்ளார்.
2023-இல் படுகொலை செய்யப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைத் (Hardeep Singh Nijjar) தொடர்ந்து, கோசல் இந்த அமைப்பின் பிரதான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

