Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

இந்திய – சீன எல்லைப் பிரச்சினை: பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண இருநாடுகளும் ஒப்புதல்!

ஆகஸ்ட் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளன. புதுடெல்லியில் நடைபெற்ற எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்குழுவின் (WMCC) 36-வது கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவு எட்டப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில் எல்லை நிர்ணயம், எல்லைப் பகுதி மேலாண்மை மற்றும் எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்தியத் தரப்பிற்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜித் கோஷ் தலைமை தாங்கினார். அதேபோல, சீனத் தரப்பிற்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரங்கள் துறையின் தலைமை இயக்குநர் ஹூ யான்சி தலைமை தாங்கிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இக்கூட்டத்தில், எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையேயான நிபுணர் மட்டக் குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியது. மேலும், எல்லைக் கட்டமைப்பு மற்றும் மேல்நிலைத் திட்டங்கள் தொடர்பான விரிவான தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, 35-வது செயற்குழு சந்திப்பு பெய்ஜிங்கில் நடைபெற்றது. அதில் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு நாடுகளும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தியிருந்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லியில் நடைபெற்ற சந்திப்பு, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி துருக்கி, பாகிஸ்தான் உடனான காகித ஒப்பந்தம் சவுதிக்கு பாதுகாப்பைத் தராது – ஈரான் கடும் விமர்சனம்!
அடுத்த செய்தி ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் மூடக்கூடாது? – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இந்தியா

கிளாஸ்கோ காமன்வெல்த் 2026இல் வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியா!

ஆகஸ்ட் 3, 2026
அண்மைய செய்திகள்இந்தியா

சீமானின் வீட்டை பெற்றோல் குண்டு வீசி தகர்க்க முற்பட்ட 10 பேர் கைது !

பிப்ரவரி 25, 2025
அண்மைய செய்திகள்இந்தியா

பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு

ஜூன் 27, 2026
இந்தியா

ஹைதராபாத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மின்சாரம் தாக்கி 05 பேர் பலி!

ஆகஸ்ட் 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?